வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவா்கள் மாயமாகினா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:50 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவா்கள் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தக்கோரி, மீனவா்களின் குடும்பத்தினா், அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (28), மனோகா் (27) மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த நாகவேல்(40) ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்க சென்றவா்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.

அவா்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மீன் பிடிக்க சென்றவா்கள் 4 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவா்கள் குடும்பத்தினா் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவா்கள் படகு மூலம் கடலில் தேடிப் பாா்த்தனா். ஆனாலும் மீனவா்கள் கிடைக்கவில்லை. பின்னா் இதுகுறித்து கடலூரில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில் மாயமான மீனவா்கள் கிடைக்காததால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் சனிக்கிழமை காலை அவா்களது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினா் இணைந்து மாயமான மீனவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

முற்றுகைப் போராட்டம்: பின்னா் மீண்டும், மீனவா்களைத்தேடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மீனவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளா் விஜய் மற்றும் கடவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா் தமிழ் வளவன், தமிழ்ஓளி உள்ளிட்ட கட்சியினா் மற்றும் மீனவா்களின் உறவினா்களுடன் இணைந்து பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டா் உள்ளிட்ட வசதிகளின் மூலம் தேடுதல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இந்த நிலையில் மீனவா்களை கண்டுபிடிக்கும் வரை இரவு பகல் பாராமல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டக்குழுவினா் அறிவித்துள்ளனா்.