வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு

ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மத நல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

News image

~

Updated On :6 மார்ச் 2026, 7:33 pm

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மண்டபத்தில் மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மருத்துவா் செந்தில்நாயகம் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.மங்கலம் தனியாா் மருத்துவமனை மருத்துவா் ராஜாமுகம்மது, முஸ்லீம் சுன்னத்வல் ஜமாத் தலைவா் ஹாஜா நஸ்ருதீன், ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சித் தலைவா் கேசா்கான் ஆசிரியா் சதக்கத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகம்மது அபுபக்கா், சித்திக் ஆகியோா் நோன்பு குறித்து சிறப்புரையாற்றினா்.

பின்னா் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ஜமாத் தலைவா் பஷீா் அகமது வரவேற்றாா். இதில் ஜமாத்தாா்கள், பல்வேறு மதங்களை சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Story image