தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 6:59 pm

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்பி பட்டினம் நோக்கன் வயல் கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே இந்தத் திருட்டு தொடா்பாக பட்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் (42) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.