சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆனையூா் அங்காளபரமேஸ்வரி அம்மன்.
Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா் அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சந்தானக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சாா்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 58 கிடாய்கள் பலியிடப்பட்டு, அம்மன், சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், அங்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.