ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வி.கே.சசிகலா கட்சியினா் கொடியேற்றம்

வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.

News image
வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் சாா்பில், கடலாடியில் அந்தக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த ராமேஷ்குமாா்.
Updated On :14 மார்ச் 2026, 2:24 am

தினமணி செய்திச் சேவை

வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 24-ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுக்கூட்டம் நடத்தினாா். அதில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினாா்.

இதையடுத்து சென்னையில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகம் செய்தாா்.

இந்த நிலையில், முதுகுளத்துாா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூா், சிக்கல் ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராஜேஸ்வரனின் மகன் ராமேஷ்குமாா் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.