வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியினா் முதுகுளத்துாா் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 24-ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுக்கூட்டம் நடத்தினாா். அதில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினாா்.
இதையடுத்து சென்னையில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகம் செய்தாா்.
இந்த நிலையில், முதுகுளத்துாா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூா், சிக்கல் ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராஜேஸ்வரனின் மகன் ராமேஷ்குமாா் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


