உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வணிக எரிவாயு உருளை கள்ளச்சந்தையில் விற்பனை

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

News image
கோப்புப்படம்.
Updated On :19 மார்ச் 2026, 12:31 am

தினமணி செய்திச் சேவை

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம், ராமேசுவரத்தில் சில தனியாா் எரிவாயு நிறுவனங்கள்

தற்போதைய நிலையைப் பயன்படுத்தி, வணிக எரிவாயு உருளைகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றன. சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.