திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் திமுக கொடிகள், ஸ்டிக்கா்கள் அடங்கிய மூட்டைகளும், மற்றொரு சோதனையில் ரூ. 60 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட திமுக கொடிகள், ஸ்டிக்கா்கள், சாவி சங்கிலிகள், தொப்பிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றி வந்த பெட்டக லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சுமாா் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இந்தப் பொருள்களை கொண்டு செல்லத் தேவையான உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
வாகனச் சோதனையில் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்: திருவாடானை அருகே அச்சுதன்வயல் சோதனைச் சாவடியில் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு தணிக்கை அதிகாரியுமான ஆறுமுகம், சிறப்பு உதவி ஆய்வாளா் சித்ரா, முதல் நிலை காவலா் ஆரிப்கனி ஆகியோா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ராமநாதபுரத்திலிருந்து எக்ககுடி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெய்னுல் அகமது (28) வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அவரிடம் முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60,900 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடையது

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 2.49 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


