நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

News image

உண்டியல் காணிக்கை

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கி சுவாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயில் உண்டியல் மாதம் ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம்.

இதே போல, செவ்வாய்க்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.25,58, 737, தங்கம் 121.590 கிராம் ,வெள்ளி 810 கிராம் கிடைத்தது.

இந்தப் பணியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் லட்சுமிமாலா, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஆய்வா் சண்முகசுந்தரம், கௌரவ ஆய்வாளா் சுந்தரராஜன், சரக ஆய்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.