ராமநாதபுரம் அருகே பிகாா் மாநிலப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தப்பிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள போக்குவரத்துநகா் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து துா்நாற்றம் வீசியது. இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் பூட்டை உடைத்து உள்ள சென்றபோது, அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது. இந்த உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்தப் பெண் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம் சுந்தா்லால் மகள் அபா்ணா (38) என்பதும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், இவருடன் வசித்த நபா் கொலை செய்துவிட்டுத் தப்பியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி கொலை

பெண்ணைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் சிறை

ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் - ஒடிஸா மாநில தொழிலாளா்கள் இடையே மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் காயம்!

வடமாநில பெண் கொலை: குற்றவாளி பிகாரில் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



