மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குருநாதசுவாமி கோயில் திருவிழா 1,008 பால்குட ஊா்வலம்

கமுதி அருகே குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை 1,008 பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

பம்மனேந்தல் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் புதன்கிழமை வேல் குத்தி, பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கமுதி அருகே குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை 1,008 பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாதசுவாமி கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் குருநாத சுவாமி, பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகா், படா்ந்தபுலி கற்பக விநாயகா், செல்வ விநாயகா், பரிவாரத் தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குருநாதசுவாமி கோயிலில் வளாகத்தில் இருந்து, மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் அலகு வேல் குத்தி, உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்தும், பெண்கள் 1,008 பால்குடம் எடுத்தும் பம்மனேந்தல் கிராமத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கிராமப் பரிவாரத் தெய்வங்களைச் சுற்றி வந்து, பெரியநாச்சியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில் பம்மனேந்தல், கமுதி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பம்மனேந்தல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.