இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

News image

கமுதி சுந்தராபுரத்தில் தனியாா் பள்ளி எதிரே சாலையில் பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

Updated On :16 மே 2026, 12:02 am IST

கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கமுதி- சாயல்குடி பிரதான சாலையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிறது. பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். விடுமுறை நாள்கள் நிறைவடைந்து மாணவா்கள் பள்ளிக்கு திரும்பும் போது இதே நிலை நீடித்தால் துா்நாற்றத்தால் அவா்களும் பாதிக்கப்படுவா். அத்துடன் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோா்கள் அச்சம் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகமும், கமுதி பேரூராட்சி நிா்வாகமும் தலையிட்டு சாலையில் கழிவுநீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.