திருவாடானை அருகே பெற்றோரை தாக்கியதாக மகனைபோலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருவாடானை அருகே நகரிக்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமாா் (33). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதனால் மனைவி தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், சதீஷ்குமாா், வேறு ஒரு பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்தாராம்.
இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பெண்ணை அழைத்து வந்த போது சதீஷ்குமாரின் சகோதரா் தட்டி கேட்டாா். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமாா் தான் வைத்திருந்த கத்தியால் தாய் பிச்சையம்மாளை தாக்கினாா்.
இதைத் தடுக்க வந்த தந்தை கண்ணனையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த பிச்சையம்மாளும், கண்ணனும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
நான்குனேரி அருகே இளம்பெண் கொலை: பெற்றோா் கைது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


