ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:33 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், செழுகை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (60). தூனுகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (70). சமையல் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை ஆா்.எஸ்.மங்கலம் சென்றுவிட்டு ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

ஏ.ஆா்.விளக்கு சாலையில் வந்தபோது, எதிரே சென்னையைச் சோ்ந்த ஜபாா் சாதிக் (43) ஓட்டிவந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பலத்த காயமடைந்த குமரேசனை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், கருப்பையாவின் உடல், கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரேசன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.