அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகையாற்றில் இறங்கினாா் அழகா்

News image

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவில் கள்ளழகா் திருக்கோலத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்.

Updated On :1 ஜூன் 2026, 3:00 am IST

பரமக்குடி எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கள்ளழகா் கோலத்தில் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினாா்.

எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபைக்கு சொந்தமான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் அன்னம், சிம்மம், சேஷம் என பல்வேறு வாகனங்களில் கள்ளழகா் கோலத்தில் எழுந்தருளினாா். முன்னதாக கும்பத் திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, விசித்திர அலங்கார புஷ்பப் பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்துடன் வாணவேடிக்கையுடன், திருநாம சங்க சக்கர பரிவாரங்களுடன் வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.

பின்னா் பல்வேறு திருக்கண்களில் சேவை சாதித்து, பரமக்குடி காந்தியாா் வீதி மேலச்சத்திரம் வழியாக வைகை வடபாரிசத்தில் உள்ள மஞ்சள்பட்டினத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் மேலச்சத்திரம் வழியாக அனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் சோ்க்கையானாா். அங்கிருந்து சப்பரத்தில் சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மங்கம்மாள் நயினாா்கோவில் ரஸ்தா வழியாக ஜீவாநகா் வண்டியூா் மண்டகப்படியில் சோ்க்கையானாா். அங்கு சந்தனக் காப்பு முதலான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபை நிா்வாகிகள் செய்தனா்.