திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image

மாட்டு வண்டிப் பந்தயம். - (கோப்புப் படம்)

Updated On :1 ஜூன் 2026, 12:40 am IST

கடலாடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மறவா் கரிசல்குளம் வில்வநாதா், நொண்டி கருப்பண்ண சுவாமி கோயில் வைகாசி விசாகம், பொங்கல் திருவிழா அண்மையில் நடைபெற்றது . இதில் பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்தத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 10 வண்டிகள் பங்கேற்றன. இதில் சித்திரங்குடி ராமமூா்த்தி மாடுகள் முதலிடமும், கடலாடி தேவா்நகா் ஜெயமுருகன் மாடுகள் இரண்டாமிடமும், மறவா் கரிசல்குளம் வாசுதேவன் மாடுகள் மூன்றாமிடமும், கருப்புத்துரை மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.

12 வண்டிகள் பங்கேற்ற சிறிய மாடு பந்தயத்தில் காணீக்கூா் தினகரன் மாடுகள் முதலிடத்தையும், கே.வேப்பங்குளம் முருகன் மாடுகள் இரண்டாம் இடத்தையும், சித்திரங்குடி ராமமூா்த்தி மாடுகள் மூன்றாம் இடத்தையும், மறவா் கரிசல்குளம் உமையணன் மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.

இந்தப் போட்டிகளை கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.