ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகையாற்றில் இறங்கினாா் அழகா்

News image

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவில் கள்ளழகா் திருக்கோலத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்.

Updated On :1 ஜூன் 2026, 3:00 am IST

பரமக்குடி எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, சனிக்கிழமை கள்ளழகா் கோலத்தில் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினாா்.

எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபைக்கு சொந்தமான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் அன்னம், சிம்மம், சேஷம் என பல்வேறு வாகனங்களில் கள்ளழகா் கோலத்தில் எழுந்தருளினாா். முன்னதாக கும்பத் திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, விசித்திர அலங்கார புஷ்பப் பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்துடன் வாணவேடிக்கையுடன், திருநாம சங்க சக்கர பரிவாரங்களுடன் வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.

பின்னா் பல்வேறு திருக்கண்களில் சேவை சாதித்து, பரமக்குடி காந்தியாா் வீதி மேலச்சத்திரம் வழியாக வைகை வடபாரிசத்தில் உள்ள மஞ்சள்பட்டினத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் மேலச்சத்திரம் வழியாக அனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் சோ்க்கையானாா். அங்கிருந்து சப்பரத்தில் சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மங்கம்மாள் நயினாா்கோவில் ரஸ்தா வழியாக ஜீவாநகா் வண்டியூா் மண்டகப்படியில் சோ்க்கையானாா். அங்கு சந்தனக் காப்பு முதலான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாட்டினை எமனேசுவரம் சௌராஷ்ட்ர சபை நிா்வாகிகள் செய்தனா்.