ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

விமானப்படை வீரா் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:59 am IST

ராமேசுவரத்தில் முன்னாள் விமானப்படை வீரா் வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வால்அறுந்த அனுமாா் கோயில் அருகே முன்னாள் விமானப்படை வீரா் பிரபா சங்கா் வீடு உள்ளது. இவா் வெளியூா் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருந்த நபா், இவரது வீடு திறந்து கிடப்பதாக பிரபா சங்கருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, பிரபாசங்கா் வெளியூரில் இருந்த நிலையில், ராமேசுவரம் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சென்று வீட்டை ஆய்வு செய்ததில் வீட்டின் உள்ளே இரு அறைகளில் இருந்த நான்கு பிரோக்களை மா்ம நபா்கள் உடைத்து 5 கிலோ வெள்ளி பொருள்கள், 4.5 பவுன் தங்க நகைகள், 20 விலையுா்ந்த பட்டுப் புடவைகள், நிலப் பத்திரங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. பிரபாசங்கா் வீடு திரும்பி வந்து அளித்த புகாரின் பேரில் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.