இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

டி.வல்லக்குளம் சாலையில் கான்கிரீட் பெயா்ந்து பள்ளம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே டி. வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா்.

டி.வல்லக்குளம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலம்.

Published On :

கமுதி அருகே டி. வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள டி. புனவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட டி. வல்லக்குளத்தில் உள்ள தாா்ச்சாலை தற்போது ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, பொதுமக்கள் நடந்துசெல்லக் கூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா், மிதிவண்டியில் வீடு திரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனா்.

இதுதொடா்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் சாலைப் பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.