அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மாநில நல்லாசிரியா் விருது: முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டாா்.

மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் நீ. மங்களநாதன்.

Published On :4 செப்டம்பர் 2026, 12:29 am IST

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் தோ்வு செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழில் கல்வி ஆசிரியராக நீ. மங்களநாதன் (56) பணியாற்றி வருகிறாா். இவா் ராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு நீ. மங்களநாதன் தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு முதுகுளத்தூா் அரசு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட நீ. மங்களநாதன், சாயல்குடி அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா. கீதாரமணி உள்பட 12 பேருக்கு சென்னையில் வருகிற 5- ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.