இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வைரவபுரம் ஸ்ரீ நல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

: காரைக்குடி வைரவபுரம், நவரத்தின நகர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்க

Updated On :13 மே 2013, 12:14 am IST

: காரைக்குடி வைரவபுரம், நவரத்தின நகர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 இக்கோயிலில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டும், மூலகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்றன.

 அதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்காக கடந்த வியாழக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, தனபூஜைகளுடன் விழா தொடங்கியது.

  வெள்ளிக்கிழமை மாலை முதல்கால யாக பூஜை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம்கால யாகபூஜை பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.

 பின்னர் கடம்புறப்பாடு நடைபெற்று காலை 11 மணிக்கு ராஜகோபுரம், மூலக் கோபுரங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சைசிவாச்சாரியார் தலைமையில் சிவாச் சாரியார்கள் பூஜைகளை நிகழ்த்தினர். பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது.   ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். மதியம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 விழாவில்,காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, சங்கராபுரம் ஊராட்சித்தலைவர் எஸ். மாங்குடி, காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் சோ. மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏகேஎம்.பாண்டி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.