தைப்பூசத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காளியம்மன் கோயில் அருகிலுள்ள முருகன் கோயிலில் மண்மலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்ணை மலையாக்கும் திருவிழா மற்றும் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில், திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீமுருகன் கோயிலில் இருந்து குளம்கரை கூத்த அய்யனார் கோயில் எதிரே உள்ள சேங்கையில் பிடிமண் எடுக்க பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
பிடிமண் எடுத்து அய்யனார் கோயில் எதிரே நினைத்த காரியம் நடக்க வேண்டி பூஜை நடைபெற்றது. பின்னர், பெண்கள் பிடிமண் தட்டுகளுடன் நகரில் சிங்கம்புணரி ரோடு, அக்கினி பஜார், அச்சுக்கட்டு, பெரியபள்ளிவாசல், செட்டிய தெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக முருகன் கோயிலை அடைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்மலை மைதானத்தில் மண் மலையாகக் குவிக்கப்பட்டு, தீபமேற்றி மலைக் கடவுள் முருகனை வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து, மூலவரான வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை. ஸ்ரீமுருகன் கோயில் கந்தசஷ்டி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கந்துவட்டிக் கொடுமை லேத் பட்டறை உரிமையாளா் தற்கொலை

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மறியல்
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
