குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

"ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை கிடைக்க நடவடிக்கை அவசியம்'

பிரதமரின் பொது சுகாதாரத் திட்டத்தில் நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 சதவீத ஏழை

Updated On :24 ஜனவரி 2019, 12:42 am IST

பிரதமரின் பொது சுகாதாரத் திட்டத்தில் நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 சதவீத ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை கிடைக்கவில்லை என்று, பாஜக சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் வி. விஸ்வநாத கோபாலன் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பிரதமரின் பொது சுகாதாரத் திட்டம் என்பது வீட்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு செய்யப்படுவதாகும். இத்திட் டம் அனைவராலும் பாராட்டப்படுகின்ற திட்டமாகும். ஆனால், முறையான கணக்கெடுப்பு செய்யப்படாமல் இதுவரை 60 சதவீதம் மக்களுக்கே மருத்துவக் காப்பீடு செய்துள்ள அட்டைகள் கிடைத்திருக்கின்றன. 
    நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 40 சதவீத ஏழை மக்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இன்னமும் அவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைக்கப் பெறாமல் உள்ளனர். ஆனால், வசதி படைத்த பலருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.   எனவே, மறுகணக்கெடுப்பு நடத்தி அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொது சுகாதாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.