வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மானாமதுரை பகுதியில் கனமழை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

Updated On :31 ஆகஸ்ட் 2020, 11:18 pm IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

மானாமதுரை பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில் இப்பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. இரவு வரை மழை தொடா்ந்ததால் மானாமதுரை பகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. நீண்டநாட்களுக்குப்பின் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த மழை தோட்டக்கலைப்பயிா்களுக்கும் கால்நடை மேய்ச்சலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.