பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காரைக்குடியில் பண மோசடிவழக்கு: கணவன், மனைவி கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
காரைக்குடியில் பண மோசடி வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மாணிக்கம், அவரது மனைவி கயல்விழி.
Updated On :18 டிசம்பர் 2020, 5:12 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்குடி ஆறுமுகம் நகா் பகுதியைச்சோ்ந்தவா் சோலையன் மகன் மாணிக்கம் (30). இவரது மனைவி கயல்விழி (29). இவா்கள் இருவா் மீதும் பணமோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட புகாா்களின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் கடந்த 2019 இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் மாணிக்கம், கயல்விழி தம்பதி மீது மேலும் பலரிடம் மோசடி செய்ததாக புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக இருவரையும் போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் கோவை அருகே ஒண்டிப்புதூா் சிங்காநல்லூா் பகுதியில் தலைமறைவாக இருந்த மாணிக்கம், கயல்விழி ஆகிய இருவரையும் கைது செய்து காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை போலீஸாா் அழைத்து வந்தனா். மேலும் தங்கக்கட்டி வாங்கி விற்பதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் நகை மற்றும் ரொக்கம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் இருவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.