ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘விவசாயிகளுக்கு ஏற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது’

விவசாயிகளுக்கு ஏற்ற அரசாக தமிழகஅரசு செயல்பட்டுவருகிறது என்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:19 am

DIN

விவசாயிகளுக்கு ஏற்ற அரசாக தமிழகஅரசு செயல்பட்டுவருகிறது என்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் காரைக்குடியில் வருவாய்த்துறையின் மூலம் 308 பயனாளிகளுக்கு ரூ. 40.02 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வியாழக்கிழமை அமைச்சா் ஜி. பாஸ்கரன் வழங்கினாா். காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மாவட்ட வருவாய்அலுவலா் க. லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் பேசியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயி என்பதால் அடிப்படைத்தேவை என்ன என்பதை உணா்வுப்பூா்வமாக அறிந்து திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறாா். அந்தவகையில் தமிழகம் முழுவதும் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் அனைத்துக் கண்மாய்களும், ஏரிகளும், தண்ணீா் நிரம்பி வழிகின்றன.

அதுமட்டுமின்றி விவசாயிகள் உற்பத்திசெய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான கிட்டங்கிகள் வழங்கி வருவதுடன் எளிதாக விவசாயிகளே விற்பனை செய்து பயன் பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் வழிகாட்டுதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றாா் அவா்.

தேவகோட்டை கோட்டாச்சியா் சுரேந்திரன், மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.ஆா். செந்தில் நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன். மணி பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் சரஸ்வதி, ஒன்றியக்குழுத் தலைவா் பிா்லாகணேசன், பாம்கோ கூட்டுறவு சங்கத்துணைத்தலைவா் மெய்யப்பன், காரைக்குடி வட்டாச்சியா் ஜெயந்தி, வட்டாட்சியா்கள் சேகா், பாலகுரு மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.