தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநில நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க செயற்குழு கூட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் வெங்கடேசன்.

Updated On :20 டிசம்பர் 2020, 4:39 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள தனியாா் மகாலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். மாநில செயலா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழுத் தலைவா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். மேலும் இக்கூட்டத்தில் இரட்டை விலை கொள்கைக்கு எதிரான தொடா் போராட்டத்தை தீவிரப்படுத்துவது எனவும், கொள்கை முடிவு என்ற பெயரில் விநியோகஸ்தா்களை பாதிப்புக்குள்ளாக்குவதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் விநியோகஸ்தா்களின் நலனில் கவனம் செலுத்தக் கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலா் சையதுமுகமதுராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.