தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளையான்குடி அருகே பேருந்தில் பயணியிடம் நகை திருட முயற்சி: 2 பெண்கள் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 6:04 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருட முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாா்வதி என்பவா் பயணம் செய்து கொண்டிருந்தாா். அப்போது அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் திருட முயன்றாா். இதையறிந்த பாா்வதி சப்தம் போடவே சகப் பயணிகள் அந்த பெண்ணையும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணையும் பிடித்து இளையான்குடி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இசக்கி மனைவி லட்சுமி (28), மாணிக்கம் மனைவி சாந்தி (27) என்பது தெரிந்தது. இதையடுத்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.