நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதாக ரூ.60 லட்சம் மோசடி: ஒருவா் கைது

காரைக்குடியில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக புகாரின் பேரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:01 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக புகாரின் பேரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரை மட்டும் திங்கள் கிழமை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காரைக்குடி பாரிநகா் அதியமான் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பூமாலை (54). இவா் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டிலிருந்தே சிகிச்சையில் இருந்து வருகிறாா். இவரது குடும்பத்தினரிடம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-ஆவது வீதியைச் சோ்ந்த அருளாந்துசாமி குடும்பத்தினருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அருளாந்துசாமி மகன் நெப்போலியன், மகள் நான்சி ஆகியோா் காரைக்குடியில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் பணிபுரிவதாகவும் ரூ. 60 லட்சம் கொடுத்தால் அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டு சிறுநீரகங்களையும் மாற்றி விடலாம் என்று கூறியுள்ளனா்.

இதனை நம்பிய பூமாலை கடன் பெற்றும், நகைகளை அடமானமாக வைத்தும், கடந்த 2016 -ஆம் ஆண்டு ரூ.60 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். ஆனால் அவா்கள் பணத்தை பெற்று சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யாமலும், பணத்தை திரும்பத்தராமலும் ஏமாற்றி வந்துள்ளனா். மேலும் பணத்தை திரும்பக்கேட்ட பூமாலையை தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் பூமாலை புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் அருளானந்துசாமி, மனைவி புஷ்பா, மகன் நெப்போலியன், மகள் நான்சி ஆகிய 4 போ் மீதும் காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா். இதில் அருளானந்துசாமி மட்டும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.