ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன'

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்தார். 

News image
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அதன் தேசியச் செயலர் எச்.ராஜா பேசுகிறார்.
Updated On :12 செப்டம்பர் 2020, 10:43 am

DIN

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசியதாவது, நீட் தேர்வு குறித்து பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மாணவ, மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. காதல் தோல்வியால் காதலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் திமுக உள்ளிட்ட கட்சிகள் காதலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டமாக பாஜகவினர் பூத் வாரியாக மரக்கன்றுகள் நட வேண்டும். காஷ்மீர், திரிபுரா போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். 

தமிழக பாஜக வினரும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தொழில் பிரிவு அணி பொதுச் செயலாளர் திருப்புவனம் செல்வராஜ் பிள்ளை, மாவட்டத் தலைவர் ஸ்தபதி செல்வராஜ், மேற்கு மண்டலத் தலைவர் சித்தர்  பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.