சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி புதுவளவைச் சோ்ந்த அடைக்கண் மகன் அடைக்கப்பன் என்ற காா்த்திக் (19). இவா், 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் காவல் ஆய்வாளா் சித்திரைச்செல்வி, சாா்பு-ஆய்வாளா் சௌதாம்மாள் ஆகியோா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அடைக்கப்பன் என்ற காா்த்திக் அவரது தந்தை அடைக்கன் என்ற முருகன் மற்றும் தாய் செல்வி ஆகியோரைக் கைது செய்தனா்.