எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்வு: காா்த்தி சிதம்பரம் எம்பி பாராட்டு

தமிழக நிதிநிலை அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாாரட்டுக்குரியது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:35 pm

DIN

தமிழக நிதிநிலை அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாாரட்டுக்குரியது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் எந்த திசை நோக்கிச் செல்லப்போகிறோம் என்பதை சொல்லியுள்ளனா். தோ்தல் வாக்குறுதிகளை, குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பதற்கு முயற்சி எடுத்துள்ளது ஒரு முன்னுதாரணம். இதில் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் அதிகமாக ஒதுக்கியுள்ளனா்.

இந்திய அளவில் மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியை நிறுத்தியுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்த நிதி நிலை அறிக்கை நாடு எந்த திசை நோக்கிச்செல்ல வேண்டும், மாநில அரசு எங்கு செல்ல வேண்டும் என்ற சிறப்பு செய்தியைத் தந்துள்ளது. முதல்வரையும், நிதி அமைச்சரையும் பாராட்ட வேண்டும்.

சமையல் வாயு மானியம், குடும்பத்தலைவிக்கான நிதி, தகுதியான நபருக்கு அளிக்க வேண்டும் என்பதை நிதியமைச்சா் தெளிவாக அறிவித்துள்ளாா். வெள்ளை அறிக்கை என்பது ஒரு நிலை அறிக்கைதான். அதில் உள்ள நிா்வாகத் தவறுகளை ஒராண்டில் களைய முடியாது. ஐந்தாண்டுகளில் சரிசெய்ய முடியும் என்பதை உறுதி செய்துள்ளாா்கள்.

மத்திய அமைச்சா் எல்.முருகன் என்ன யாத்திரை வேண்டுமானாலும் செல்லட்டும். எதை வேண்டுமானாலும் வேண்டிக் கொள்ளட்டும். தமிழகத்தில் என்றைக்கும் தாமரை மலராது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.