எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளையான்குடி அருகே கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: பெண் கொலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில்  பெண் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

News image
இளையான்குடி அருகே கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: பெண் கொலை
Updated On :25 ஆகஸ்ட் 2021, 3:41 pm

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில்  பெண் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இளையான்குடி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்து மனைவி பஞ்சவர்ணம் (60). அவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயராணி குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.

இந்நிலையில்  கிருஷ்ணாபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும் இடையே பிரச்னை உருவாகி தகராறு ஏற்பட்டது.

அப்போது சிலர் சேர்ந்து பஞ்சவர்ணத்தை  கீழே தள்ளிவிட்டதில்  காயமடைந்த அவர்  அருகேயுள்ள பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பஞ்சவர்ணம் உயிரிழந்தார்.

இதுகுறித்து பஞ்சவர்ணம் கணவர் முத்து அளித்த புகாரில் ஜெயராணி உள்ளிட்ட 4 பேர் மீது இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.