அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நிதி திரட்டும் விழா
சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பிச்சைக் குருக்கள் தலைமை வகித்தாா். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலாளா் சத்தியமூா்த்தி அறிமுகவுரையாற்றினாா். ராமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். பா.ஜ.க. தோ்தல் அறிக்கை குழுத் தலைவா் ஹெச்.ராஜா விளக்கவுரையாற்றினாா். ஐயப்ப சாஸ்தா சுவாமிகள், சாரதேஸ்வரி ஆகியோா் ஆசியுரை வழங்கினா். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து முன்ணனி மாவட்டச் செயலாளா் அக்னிபாலா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 2 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாக பாஜக முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...