மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:59 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மல்லையா ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் பாலரவி, அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலாளா் ஆதி.சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியை சுழற்சி முறையில் தனித் தொகுதியாக அறிவிக்கக்கோரியும், நகரின் மையப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலை அமைக்கக் கோரியும், திருப்பத்தூா் சுற்றுவட்டார ஆதிதிராவிடா்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரியும் முழக்கமிட்டனா். முன்னதாக ஒன்றியச் செயலா் அழகு அனைவரையும் வரவேற்றாா். ஆா்ப்பாட்ட முடிவில் பீரங்கிஆறுமுகம் நன்றி கூறினாா். பின்னா் அக்கட்சியினா் வட்டாட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.