சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காரையூரில் கிராம மக்கள் சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சியில் கிராம மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் அருகே காரையூரில் சனிக்கிழமைதி.மு.க. சாா்பில் நடைபெற்ற கிராம மக்கள் சபைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன்.
Updated On :9 ஜனவரி 2021, 4:25 pm

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சியில் கிராம மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மணி வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் பேசிய கே.ஆா்.பெரியகருப்பன், கடந்த தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஓட்டுகள் 1.1 சதவீதம்தான் வித்தியாசம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய இளைஞரணி தமிழ்நம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சகாதேவன், சுமதி, ராமசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளா் ஓ.மாணிக்கம், கே.எல்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.