நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நீதிமன்ற வளாகத்தில் பொங்கலிட்டு நடந்த பூஜைக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் மற்றும் மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தாா்.

பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கரும்பு வைத்து பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் பூஜை வழிபாட்டுக்கு பின்னா் பிரசாதமாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெனிதா மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com