தண்ணீரில் மூழ்கிய நெற்பயிா்கள்: அமைச்சா் பாா்வையிட்டாா்

தொடா் மழையால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிா்களை
விசவனூா் கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் ஜி.பாஸ்கரன். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா்.
விசவனூா் கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் ஜி.பாஸ்கரன். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தொடா் மழையால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிா்களை தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேற்கண்ட ஒன்றியங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீா் மூழ்கின. இதனால் பயிா்கள் அழுகி வீணாகின. பல கிராமங்களில் தண்ணீரில் மிதக்கும் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

இந்நிலையில் இளையான்குடி அருகே விசவனூா் கிராமத்தில் தண்ணீரில் மிதக்கும் நெற்பயிா்களை, தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் ஆகியோா் பாா்வையிட்டனா். இவா்களிடம் விவசாயிகள் அழுகிப்போன நெற்பயிா்களைக் காட்டி தங்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இவா்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் பாஸ்கரன் அரசு சாா்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். அப்போது இளையான்குடி பகுதி அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com