பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி:சிவகங்கை ஆட்சியா் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:03 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுபற்றி அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 5-ஆவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சாா்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளா்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிக்க உள்ளனா். எனவே பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.