பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மான்செஸ்டர் யுனைடெட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்த ப்ரூனோ ஃபெர்னான்டஸ்!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

பிரீமியர் லீக் ஆட்டத்தில் ப்ரூனோ ஃபெர்னான்டஸ். - படம்: ஏபி

Updated On :16 மார்ச் 2026, 1:12 pm IST

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் ஒரே சீசனில் அதிக (16) அசிஸ்ட்ஸ் (கோல் அடிக்க உதவி புரிதல்) செய்தவராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பாக டேவிட் பெக்கம் 1999/2000 சீசனில் 15 அசிஸ்ட்ஸ் செய்திருந்தார். இந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஆஸ்டன் வில்லா அணியும் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் 3-1 என யுனைடெட் அணி வென்றது.

இந்தப் போட்டியில் முதலிரண்டு கோல்கள் (53’, 71’) அடிக்க ப்ரூனோ ஃபெர்னான்டஸ் உதவினார். இதன் மூலம் 2025/26 சீசனில் 16 அசிஸ்ட்ஸ் உடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ரூனோ ஃபெர்னான்டஸ் இத்துடன் பிரீமியர் லீக்கில் 100 அசிஸ்ட்டுகளைச் செய்த மூன்றாவது மான்செஸ்டர் யுனைடெட் வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

Summary

Bruno Fernandes breaks Manchester United's assists record with stellar showing against Aston Villa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.