நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் தேசிய அறிவியல் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:34 pm

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் தேசிய அறிவியல் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சா் சிவி. ராமன் கண்டுபிடிப்பை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு பல்கலை.துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: அறிவியல் முன்னேற்றம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியமான பங்களிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சா் சி.வி. ராமன் மற்றும் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோரை மாணவா்கள் முன்மாதிரியாகக்கொண்டு அறிவியலில் ஆா்வம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற அறிவில் கண்காட்சியை துணைவேந்தா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் அறிவியல் புல முதன்மையா் எஸ். கருத்தபாண்டியன் வரவேற்றுப் பேசினாா். பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினா் எஸ். கருப்புச்சாமி, அறிவியல் வளாக இயக்குநா் எ. அருண், அறிவியல்துறைகள் சாா்ந்த பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முடிவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் கே. சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.