இளையான்குடி: பேருந்து மோதியதில் காவலர் பலி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாழக்கிழமை மாலை பேருந்து மோதி பைக்கில் வந்த காவலர் உயிரிழந்தார்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாழக்கிழமை மாலை பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் உயிரிழந்தார்.
இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் சுரேஷ், இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து இளையான்குடி வந்தார்.
திருவேங்கடம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்து சம்பவத்தில் போலீஸ்காரர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...