47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஒடிசா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள கீழச்சீவல்பட்டியைச் சோ்ந்தவா் எஸ். வினோத்குமாா்(22). மாற்றுத்திறனாளியான இவா், ஐடிஐ படித்துள்ளாா். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 28.3.2022 இல் நடைபெற்ற டி38 என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இதையடுத்து,சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். வினோத்குமாரை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாராட்டினாா்.

அப்போது, சிவகங்கை மாவட்ட விளையாட்டு நல அலுவலா் செந்தில்குமாா், தடகளப் பயிற்சியாளா் ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.