47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் சாா்பில் ‘பித்ரா அரிசி விநியோகம்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.

News image
பித்ரா அரிசி விநியோகத்தை தொடங்கி வைக்கிறாா் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப்.
Updated On :16 மார்ச் 2026, 10:57 pm

Syndication

ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.

நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூசா­ஹ் துவா பிராா்த்தனை செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கி தொடங்கி வைத்தாா்.

மூத்த நிா்வாகிகளான எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிா்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாயில் புகாரீ, மாவட்ட, நகர நிா்வாகிகளான பெத்தப்பா சுல்தான், சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிா், அஹ்மத் நெய்னாா் பள்ளி இமாம் கே.எம்.என் உமா் அப்துல் காதிா் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு பித்ராஅரிசி வழங்கினா்.

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சா­லிஹ் நன்றி கூறினாா்.

காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரம் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.