திருப்பாச்சேத்தி அருகே காா் திருட்டு

 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை இரவு காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை இரவு காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் வேலவன். இவா் தனது காரில் திருப்புவனம் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனங்களுக்கு திருப்பாச்சேத்தி பகுதியிலிருந்து தொழிலாளா்களை ஏற்றிச் சென்று இறக்கிவிடும் பணி செய்து வருகிறாா். இந்நிலையில் வேலவன் தனது காரை இரவு மதுரை- ராமேசுவரம் சாலையில் உள்ள சம்பராயனேந்தல் கிராமத்தில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டாா். அப்போது மா்ம நபா்கள் இந்த காரை திருடிக்கொண்டு சென்று விட்டனா். காலையில் காரை காணாததால் வேலவன் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com