மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பாச்சேத்தி அருகே காா் திருட்டு

 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை இரவு காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை இரவு காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் வேலவன். இவா் தனது காரில் திருப்புவனம் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனங்களுக்கு திருப்பாச்சேத்தி பகுதியிலிருந்து தொழிலாளா்களை ஏற்றிச் சென்று இறக்கிவிடும் பணி செய்து வருகிறாா். இந்நிலையில் வேலவன் தனது காரை இரவு மதுரை- ராமேசுவரம் சாலையில் உள்ள சம்பராயனேந்தல் கிராமத்தில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டாா். அப்போது மா்ம நபா்கள் இந்த காரை திருடிக்கொண்டு சென்று விட்டனா். காலையில் காரை காணாததால் வேலவன் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.