மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளையான்குடி கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நாளை தொடக்கம்

நாட்டின் 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்துப் போட்டி

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

நாட்டின் 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்துப் போட்டி சனிக்கிழமை (ஆக. 27) முதல் 29 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியில் கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த 20 கால்பந்தாட்ட அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகள் இளையான்குடி டாக்டா் சாகிா்உசேன் கல்லூரி மைதானத்திலும், ஸ்டாா் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழு மைதானத்திலும் நடைபெறுகிறது.

இதில் ஆக. 28 ஆம் தேதி நடைபெறும் போட்டியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி பாா்வையிடுகிறாா். 29 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த இந்திய கால்பந்தாட்ட முன்னாள் வீரா் ராமன் விஜயன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை பேராசிரியா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.