47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்தில் நாளை 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:44 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை 1,264 மையங்களில் நடைபெற உள்ளன. இம்முகாமில், 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதுதவிர, ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் சிறப்பு முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளன.

இப்பணியில் பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து 5,060 போ் பணியாற்ற உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.