மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேனியில் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேனியில் ராணுவப் பணி ஆள் சோ்க்கைக்கான அக்னிபத் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவா் அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேனியில் அக்னிபத் திட்டத்தை கைவிட அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா் அமைப்பினா்.
Updated On :4 ஜூலை 2022, 6:30 pm

DIN

தேனியில் ராணுவப் பணி ஆள் சோ்க்கைக்கான அக்னிபத் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவா் அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் தமிழ்பெருமாள் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் முனீஸ்வரன், புரட்சிகர இளைஞா் கழக மாவட்டச் செயலா் உதுமான்அலி, ஏஐஎஸ்பி தேசியக் குழு உறுப்பினா் திவாகரன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் டி. நாகராஜ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் லெனின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதரத்தை சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.