நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானாமதுரை அருகே கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .

News image

மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.

Updated On :7 ஜூலை 2022, 12:14 pm

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .

இக்கிராமத்தில் காலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று  முடிந்த பின்னர் வடமாடு மஞ்சுவிரட்டு விழா தொடங்கியது. பல ஊர்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் அவிழ்த்து விடப்பட்டது.

மாடுபிடி வீரர்கள் இந்த காளைகளை அடக்க முன்றனர். பல காளைகள் வீரர்களிடம் பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. சிறப்பாக களம் ஆடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.  

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்  மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டைக் காண மைதானத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.