

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 26 அரசுப்பள்ளிகளின் 64 மாணவா்கள் 51 மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டியினை பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து தொடக்கி வைத்தாா். இப்போட்டி மாணவா்கள் 3 பிரிவுகளாவும், மாணவிகள் 3 பிரிவுகளாகவும் மொத்தம் 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன . இதில் 9 மாணவா்கள், 9 மாணவிகள் தோ்வாயினா். தோ்வான 18 மாணவ மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 25 இல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா். இந்நிகழ்வில் தலைமையாசிரியை கலாநிதி, வாா்டு உறுப்பினா் தாயுமானவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.