3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பாச்சேத்தி அருகே பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சேவை குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை நகா் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:11 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சேவை குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை நகா் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

மதுரையிலிருந்து மழவராயனேந்தல் கிராமத்திற்கு தினமும் 6 முறை நகா் பேருந்து சேவை நடைபெற்று வந்தது. இந்த சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது காலை, மாலை என இரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கூடுதல் முறை பேருந்தை இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலையில் மழவராயனேந்தல் கிராமத்திற்கு வந்த பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினா். ஏற்கெனவே இயக்கப்பட்டதுபோல் ஆறு முறை பேருந்தை இயக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பாச்சேத்தி போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனா். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக பேருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.